இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கதீட்ரலின் காமதேவன்

ஜெயமோகனின் சிறுகதையான ‘மன்மதன்’ நான் வாசித்து தீராத கதைகளில்  ஒன்றாகவே நீண்ட நாட்கள் என்னுள் இருந்து வந்தது. மற்றொரு தருணத்தில், ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் சிறுகதையை  முதன் முதலாக வாசித்த போது . அதனுடன் ஒப்பிட்டு ‘மன்மதன்’ கதையின் வாசிப்பினை விரிவாக்கலாம், என்ற எண்ணம் எழுந்தது. இந்த இரு கதைகளையும் ஒப்பிட்டு வாசித்து அறியுந்தோறும்   இந்த இரு சிறுகதைகளின் மீதான பிரமிப்பு மேலும் அதிமடங்கானது. புனைக்கதை எழுத்தாளனுக்கும், வாசகனுக்கும் இடையே நிகழும் உணர்வு பரிமாற்றத்திற்கு பொருத்தமான சான்றாக பலமுறை ஜெயமோகன் அவர்களின் பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட கதை கதீட்ரல். கதீட்ரல் கதையின் முதன்மைப் பாத்திரமான ராபர்ட்  விழியிழந்தவர். கருப்பின அல்லது கலப்பின(coloured) பெண்ணாக  வாய்ப்பிருக்கும் தன் மனைவி இறந்தபின் வாழும் தனியர். பத்தாண்டுகளுக்கு முன்பு அவரின் வாசிப்பிற்கும் தனிவாழ்விற்கும் உதவியாளராக  உடனிருந்த முன்னாள் பணிப்பெண்ணும் மற்றும் இந்நாள் தோழியுமான பெண்ணைக் காண வருகிறார். இரு முறை தன் முகம் மீது ராபர்ட்டின் கை விரல்கள் படர்ந்துணர அனுமதித்தவர் இந்த தோழி.  மனம் கிளர்ந்த அரிதான கணங்களில் மட்டும்