இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுரையும் கேளிக்கை சினிமாவும்

படம்
நடிகர் குரு சோமசுந்தரம் ஒரு பேட்டியில்,  மதுரை நகருக்குள்,  80 திரையரங்குகள் இருந்ததாக ஒரு தகவலைச் சொல்கிறார். எட்டு கிலோ மீட்டர் சுற்றளவுள்ள ஒரு நகருக்கு இது ஆச்சரியமான எண்ணிக்கை என முதலில் தோன்றும்.  செயற்கைக்கோள் ஒளியலை வரிசைகளின்  அதீத வளர்ச்சிக்கும், அகன்றும் நீண்டும் கொண்டே இருக்கும் தட்டையான தொலைக்காட்சி தொழில்நுட்பத்திற்கும்,   முன்னரான காலம் அது. அன்று  மதுரையில் உயிர்ப்புடன்  தொடர்ந்து திரையிட்டபடி  இருந்த அரங்குகளின் கணக்குதான், குரு சோமசுந்தரம் கூறியது  வெளியூர்க்காரர்கள் பார்வையில் மதுரை ஒரு கோயில் நகரம். ஆனால் உண்மையில்  மதத்திற்கு நிகராக, கேளிக்கை சினிமா என்னும் ஊடகத்தை  மக்கள் தொடர்ந்து ஆராதித்து வருகிற நகரம் மதுரை.  வேறெந்த பொழுதுபோக்கிற்கும்  இடமில்லாமல், இருந்தாலும் அதற்கு மனமில்லாமல், அரங்குகளில் மட்டுமே மக்கள் அன்று  கேளிக்கை சினிமாக்களை கண்டு  களித்தனர்.  அரங்கிற்கு வெளியேயான வாழ்க்கையில் கூட அந்த கனவுலகின்   அறிதுயிலில் வாழ்ந்து வரும் ஒரு நகரத்திற்கு 80 அரங்குகள் என்பது பொருத்தமான எண்ணிக்கை கணக்குதான்.  வைகைக்கு தென் மேற்கு கரைக்கு அருகில் இருந்த திரையரங்குகளான