இடுகைகள்

செப்டம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெருநதிக்கரை

பெருநதிக்  கரையொன்றில் கைபிணைத்து அருகமர்ந்து  அருமதி எதிர்நோக்கி அரை  துயிலிலாழ்ந்தோம் வான் நிறைத்த முகில்த் தொகை  மதி மறைத்த நேரம், கண் நிறைக்க  தங்க மின்னல் தோன்ற, நோவாகிச்  சரிந்தோம் தோள் கனக்க  எழுகையில் மின்கல்மணி மூட்டை மணி கோர்த்து சொல்லாக்கி பஞ்சாக உதிர்த்தபின் நதியா, மதியா, முகிலா, மின்னலா, மணியா, பஞ்சா, சொல்லா என்றேன் கண்கள் சிரிக்க,  ஈரடி எடுத்து முடிவருடி  அணைத்துப் பிரிந்தாய் மீண்டு வந்து  மீள மீள மீட்கும் நாட்கள் நாளை வருமோ? <நிறைவு>