பெருநதிக்கரை

பெருநதிக்  கரையொன்றில் கைபிணைத்து அருகமர்ந்து 

அருமதி எதிர்நோக்கி அரை  துயிலிலாழ்ந்தோம்

வான் நிறைத்த முகில்த் தொகை  மதி மறைத்த நேரம்,

கண் நிறைக்க  தங்க மின்னல் தோன்ற, நோவாகிச்  சரிந்தோம்

தோள் கனக்க  எழுகையில் மின்கல்மணி மூட்டை

மணி கோர்த்து சொல்லாக்கி பஞ்சாக உதிர்த்தபின்

நதியா, மதியா, முகிலா, மின்னலா, மணியா, பஞ்சா, சொல்லா என்றேன்

கண்கள் சிரிக்க,  ஈரடி எடுத்து முடிவருடி  அணைத்துப் பிரிந்தாய்

மீண்டு வந்து  மீள மீள மீட்கும் நாட்கள் நாளை வருமோ?



<நிறைவு>

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்