விஷ்ணுபுரம் விருது 2016 இரண்டாம் நாள்–வண்ணதாசன் உரை

IMG_8435

எழுத்தாளர் சு வேணுகோபால் உரையாடலின் நடுவே, பார்வையாளர்களின் வாழ்த்துக்களுடனும், வணக்கங்களுடனும், மேடையில் வந்து அமர்ந்தார் எழுத்தாளர், கவிஞர் வண்ணதாசன் அவர்கள். மிக மெல்லிய, ஆனால் தீர்க்கமான குரலில் அவரது உரையை துவங்கினார். அவரின் கதைகள் வாசகனிடமிருந்து பெற்றவற்றை வாசகனுக்கே திரும்ப அவர் எழுதும் நீண்ட கடிதம் என்றார்.  ஆற்றின் கரையிலிருந்து ஆற்றின் நடுவில் ஓடும் வெள்ளத்தை பார்ப்பதுபோல, கடலின் கரையிலிருந்து ஓயாத கடலை பார்ப்பது போல, சுடலைமாடன் கோயில் வாசலில் இருந்து தெருவில்  இருக்கும் சலிக்காத மனிதர்களை பார்ப்பது போல, வாழ்வின் ஓரத்தில் இருந்து தீராத மையத்தை பாரப்பது தனக்கு பிடித்திருக்கிறது என்றார். ஓரு பெரிய விவசாய குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையில் பிறந்திருக்கின்றார். அவரது சொற்களை, வாசகங்களை,  வாசகன் வந்து அவருக்கு ஞாபகப்படுத்தும் நிலையிலுருக்கும் எழுத்தாளனாகவே இருக்க விரும்புவதாக கூறினார்..  பதட்டத்திற்கு முந்திய அமைதியாக, அந்த அமைதியை கலைக்கும் உங்களிடம் பெற்ற சொற்களாக இருந்து,  உங்களுக்கே திரும்ப அளிப்பவை எனது கதைகள் என்றார்.  குமிழியிலே உதிர்ந்த சிறுகுகள், இலைகள் மேலும், கீழும் வளரும் புழுக்கள், குறுக்கிடும் கீரிபிள்ளைகள் போல என பல வர்ணங்களை காட்டி, அதனை உடைத்துவிட்டு திரும்புகிறேன் என்றார்.  ஒரே நேரத்தில் தான் புல்லாகவும், மானாகவும் இருக்க விரும்புவதாக கூறினார்.

மிகச்சிறியவற்றை உருபெருக்கி நுட்பமாக்கி, பேருருவத்தில் காட்டுவதே இலக்கியவாதியின் செயல் என்கிறார். உலகம் முழுவதற்கும் சமைக்கும் சமையற்காரி போல, கிரகித்து கொண்ட பாட்டிகளின் கதைகளை கூற விரும்புவதாக கூறினார். அம்மாச்சி பெற்ற அனபுமகள் வளர்த்த , பசியே அறியாத 6 குழந்தைகளில் இரண்டாவதாக பிறந்தார். வாழ்வில் அவர் கடைபிடித்து வரும் அதிகபட்ச நேர்மை, உணமையை போல படைப்பகளை எழுதுகிறேன் என்றார். வாசகர்ளை நோக்கி, தயவு செய்து, கல்யாண்ஜியாக, வண்ணதாசனாக என்னை தொடுங்கள். மலையப்பனுக்காக மன்னிப்பு, முத்தத்தை கொடுங்கள் என்றார். மாரியப்பன் என்கின்ற மலையப்பன் சமையற்கார், வாய்பேச முடியாதவர், சாக்பீஸால் எழுதிய பையன், கற்பனைக்கெட்டா ஓவியம் வரைபவர், ஆனார் இறுதியில் மாட்டு தொழுவத்தில் நாண்டு கொண்டிருக்கிற செய்தி கிடைத்தாலும், மலையப்பன்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆனால் மாரியப்பன் இறந்து விடுகிறார்கள் என்றார்.

IMG_8448

அப்போது அவரின் கதையில் வரும் காசர்கோடு ராஜா ஹேர் கட்டிங் அனட் சலூன் வைத்திருக்கம் மலையப்பனை பற்றி கேட்டார். 1959ல் 3வது படிக்கும் ஆசிரியர்,  நாளிதழில் சிரிப்பு படம் வரைந்து அதற்கு அன்று அவருக்கு மிகப்பெரிய சன்மானமாக 5 ரூபாய் வாங்கும் உற்சாக மாணவனாக இருந்திருக்கிறார். அவரின் ஓவியங்களின், கோடுகள், மனிதர்களை வரையும் அமசத்தினால் கவரப்பட்ட,  முதல் ரசிகரும், வாசகருமான காசர்கோடு மலையப்பன் அவருக்கு பிரியமான கடிதங்களை தபாலட்டையில் அனுப்பி பதில் பெற்றுக்கொள்கிறார்.  ஒருநாள் தபாலில் பொதிபோன்ற மூட்டை அவருக்கும் வருகிறது. அது காசர்கோடு மலையப்பன் பரிசாக அனுப்பிய துணி. அதுவரை ஊதா நிற அரைகால் சட்டை அண்ந்த ஆசிரியர், முதன் முதலில் மலையப்பன் பிரியத்துடன் அளித்த துணியில் இரண்டு கால்சட்டை தைத்து அணிகிறார். அதனை அணிந்து கொண்டுதான்,  B com  படிக்கும் போது, மாணவர், ஆசிரியர் குழு புகைபடத்தில் பதிவாகியிருக்கின்றார் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறார். எழுத்தாளர் குகைகளில் மறைத்து வைத்திருந்த  மலையப்பனை, அவரின் வாசகரான ஜெமோ நேரில் சந்தித்து அவரின் ‘’சொல்ல மறந்த கதை’ தந்த உணர்வினை பகிர்ந்திருக்கிறார்.

அவரின் பேச்சினை தொடர்ந்த கலந்துரையாடலில், சு வேணுகோபால் அறைதோழரின் நண்பரான செல்வம் வண்ணதாசனின் அணுக்க சகவாசகராக இருந்திருக்கிறார். 20 வருடங்களாக தொடர்ந்து அவரின் எழுத்துகளை ஆழ்ந்து தீவிரமாக வாசித்து வரும் நண்பர். வண்ணதாசனை படிக்கவில்லை எனில் அவரது மனைவியை விவாகரத்து செய்திருப்பேன் என்றிருக்கிறார். அதற்கு பதிலாக வண்ணதாசனின் எழுத்துகளால் அவரை மீண்டும் காதலித்திருக்கிறார். தானும் ஒரு படைப்பாளி என எண்ணாமல், ஒரு வாசகனாக படித்ததில் சமவெளிதான் அவரின் மிகசிறந்த கதைதொகுப்பு என்றார். சின்னு முதல் சின்னு வரை கதையில் தினகரி அவரின் தந்தையிடம் ‘’கொய்யாபழம், மாதுளை பழம் வாங்கிவந்திருக்கிறோம்’ என கூறுமிடம் நுட்பமாக வந்திருப்பதாகவும், தான் ரசித்ததாகவும் கூறினார். 

எழுத்தாளர் பவாசெல்லதுரை, வண்ணாதாசன் எழுத்தின் வழியே தன் நிலத்தில் அரிதாக காண கிடைக்கும்  குல்முகர் மலரினையும், வாதம் மரத்தையும் தானும் மனம் வழியே கண்டதாக கூறினார். தேவதேவன் வீட்டின் தட்டோட்டியில் (மாடி) உதிர்ந்து கிடக்கும்  குல்முகர் மலர் செறிவை நினைவுபடுத்தி, எழுத்தாளனுக்கு அகற்றப்படாத வாழ்வின் குப்பைகள் , சருகுகளும் வேண்டுமென்றார்.  அதற்கு, ஆசிரியர், பவாவின் எழுத்தில் தான் நேரில் பன்னீர் மலர்களையும், பவளமல்லியையும் கண்டதாக பதிலளித்தார். எளிமையில்தான் நுட்பங்கள் வந்து குமியும் என்றார். ஒரு வாசகி தான் சிறு பெண்ணாக இருந்த போது எழுதிய வாசக கடித்ததிற்கு, பொறுமையும், நிதானமுமாக பதில் கடிதம் எழுதியதை நினைவு கூர்ந்தார். அன்னை வீட்டிற்கு, விடுமுறைக்கு திரும்ப வரும் திருமணமான பெண் போல வண்ணதாசன் எழுத்தை வாசிக்கும் போது உணருவதாக கூறினார்.

அவரின் பேச்சு என்னும் பட்டாம்பூச்சியை அதே படபடப்புடன் முழு கவனத்துடன், மென்மையாக ஏந்தி, உள்ளங்கைகளில் வைத்து , ரசித்து வாசிக்கும் உள்ளங்களுக்குக்கு திரும்ப அளிக்க நான் முயன்றிருக்கிறேன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எண்பதுகளின் தமிழ் சினிமா - திரைப்படங்களின் ஊடாக தமிழ் சமூக வரலாறு - ஸ்டாலின் ராஜாங்கம்

பறக்கை நிழற்தாங்கல் 2017

சுனில் கிருஷ்ணனின் அம்புப் படுக்கை வாசிப்பனுபவம்